Sunday, December 14, 2008

காணாமல் போன நடிகைகள்...!

பாக்கிய ராஜின் "சுவரில்லாத சித்திரங்கள்" பார்க்காதவர்கள் யாரும் இருக்க மாடீர்கள் என்று நினைக்கிறேன்!அதில் வரும் கதாநாயகி பார்க்க "கிளி கொஞ்சுவதைப் போல" இருப்பார் ,இதை நான் சொல்லவில்லை விகடன் விமர்ச்சனத்தில் படித்தேன்.அதே நடிகை தான் "நான் சிவப்பு மனிதனில் ரஜினிக்குத் தங்கையாக வந்து வில்லன்களால் மானபங்கப் படுத்தப் பட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வார் படத்தில்;
அந்தப் படம் குறித்த விமர்சனத்தில் தான் மேற்கண்ட கிளி கொஞ்சல் பாராட்டைப் பார்த்தேன்.அத்தனை அழகான நடிகை மட்டுமல்ல நடிக்கவும் தெரிந்த நடிகை தான் என்பதை சுவரில்லாத சித்திரங்களில் காணலாம்.பிறகு ஏன் அவர் நிறைய படங்களில் தலை காட்டவில்லை என்று தெரியவில்லை.இதே நடிகையை கே.பி. யின் "பாமா விஜயத்தில் " பார்த்திருக்கிறேன்.
"வரவு எட்டணா...செலவு பத்தணா...
கடைசியில் துந்தனா...துந்தனா...துந்தனா..."
என்று சிறுமியாக வந்து ஆடுவார்.அவர் நடித்த வேறு படங்கள் எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை .
அதே போல "அருந்ததி" என்றொரு நடிகை .பெரும்பாலான படங்களில் ஹீரோயினின் தோழியாகவோ அல்லது ஹீரோவின் தங்கையாகவோ வருவார்.பாரதி ராஜாவின்"புதுமைப் பெண்ணில்" பிரதாப் போத்தனின் தங்கையாக வந்து வில்லன் ராஜசேகரால் மானபங்கம் செய்யப்பட்டு கடைசியில் தற்கொலை செய்துகொள்வார்.
"விதி" படத்தில் கூட பூர்ணிமாவின் வழக்கைப் பற்றி பாக்கியராஜிடம் செய்தி சேகரிக்கும் நிருபராக வருவார்.
இதே போல கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த "தாரா"
சோலைப் புஷ்பங்களே ...என் சோகம் சொல்லுங்களேன் "
என்று முரளியுடன் ஒரு படத்தில் பாடுவார் அவரே தான் .அவரை அதற்குப் பின்" பறவைகள் பலவிதம்" படத்தில் ஜனக ராஜின் ஜோடியாகப் பார்த்த ஞாபகம். இவரே தான் "அக்னி நட்ச்சத்திரம்" படத்தில் கார்த்திக்கின் தங்கையாக வருவார் .
இவர்களைப் போலவே "இதயத்தைத் திருடாதே " படத்தின் நாயகி பெயர் நினைவிலில்லை.அந்த ஒரு படத்தோடு சரி பிறகு அவரைக் காண முடியவில்லை.
"ஓ ...ப்ரியா ...ப்ரியா...என் ப்ரியா...ப்ரியா..." எங்கே போனாரோ?!இவர்களோடு கமலின் குணா படத்தில் வரும் "ரோகினி"
"கண்மணி அன்போடு ககாலன் நான் எழுதும் கடிதமே " அவரே தான் அவரையும் அந்த ஒரு படத்தோடு காணோம்;இவர்கள் அனைவருமே அழகாய் இருப்பதோடு ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் கூட நினைவில் நின்றவர்கள் .
எங்கே போனார்கள் இந்த நடிகைகள் ?
யாருக்காவது ஏதாவது சேதி தெரிந்தால் இங்கே பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அதோடு இந்தப் பதிவு வாசிக்கப் பிடித்திருந்தால் உங்களது வாக்குகளையும் மறவாமல் அளியுங்கள் .

3 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல தேடலாயிருக்கே ...

பரணி said...

வாங்க ஜமால்...
சும்மா தான் ஒரு ஆர்வம்...!

நட்புடன் ஜமால் said...

உங்கள் தேடலை விட

பாடல்கல் அருமை.