Friday, October 24, 2008

அவ்வளவு ஈசியா என்ன ?








எழுத வேண்டுமென்றால் எதை எதையோ எழுதலாம் ,உட்கார்ந்து (இது ரொம்ப முக்கியம் )ஒரு இடத்தில் உட்கார்ந்து பொறுமையாக விஷயங்களை எழுத வேண்டுமே...அது ரொம்ப அவஷியமாயிற்றே,கற்பனையில் உதிக்கும் விஷயங்களோ அல்லது நேரில் பார்த்து பாதித்த விஷயங்களோ எதுவாய் இருந்தாலும் கோர்வையாய் ரசனை குறையாமல் எழுத்தில் கொண்டு வருவது என்பது சாமான்ய காரியமில்லையே ,இதனால் என்னுடைய எழுதும் ஆர்வம் வெகுநாட்களாய் தள்ளிக் கொண்டே போயிற்று ;


ஒருவழியாய் எழுதலாம் என்று பேனாவைத் தேடினால் அதைக் காணோம் .பென்சிலில் எழுதலாம் தான் ...ஆனால் சீக்கிரத்தில் அழிந்து விடும்,மைபேனா எங்கோ ஒரு மூலையில் தட்டுப்பட்டது ...எப்போதோ அம்மாவின் சின்ன வயதில் வாங்கிய பேனா ;ரொம்பப் பழசாய் கொஞ்சம் அழுத்தி கழுத்தைப் பிடித்து எழுத ஆரமித்தால் உடைந்து பொய் பேப்பரில் மை கொட்டிவிடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டு மேஜை டிராயரில் என்னைப் பார்த்து நக்கலாய் சிரித்தது .இப்போதெல்லாம் அதுவும் இந்த இரண்டாயிரத்து எட்டில் எந்த அறிவாழி மை பேனா யூஸ் பண்ணுகிறது ? பேனா என்றால் ரேனால்டோ அல்லது ஜெல் பேனாவோ தான் ,


ம்ம்ம் ...அதைத்தான் ரெண்டு நாட்களாய் தேடிக் கொண்டிருக்கிறேன் வீட்டில் எல்லா இடத்திலும் இன்னும் கிடைத்தபாடில்லை , கிடைத்தால் உடனே எழுத ஆரம்பித்து விடுவேன் ,


கிடைக்க வேண்டுமே ...கிடைக்கும் ...கிடைக்கும் ;அதுவரை என்ன செய்யலாம் ?ஏதாவது செய்து தானே ஆக வேண்டும் ? "கழுதை கெட்டால் குட்டிச் சுவர்" டிவி பார்ப்பதே தேசிய பொழுதுபோக்கு ,நடக்கட்டும் ...நடக்கட்டும் பேனா தேடும் போதெல்லாம் ஒன்றும் சொல்லாத என் கணவர் டிவி பார்க்க உட்கார்ந்ததும் நமுட்டுச் சிரிப்புடன் வெளியில் கிளம்பினார் .












No comments: