Thursday, October 30, 2008

ஈழம் -சில வரலாற்று உண்மைகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் நல்லாட்சி நடத்திய தமிழ் மன்னன் எல்லாளன் ,ஈழத்தை ஆண்ட கடைசி மன்னனது பெயர் சங்கிலியன் ,போர்த்துகீசியருக்கு இணங்கிப் போக மறுத்ததால் சங்கிளியனைச் சிறை பிடித்து கோவாவில் தூக்கிலிட்டனர் .ஈழத் தமிழர்களது சொந்த மண்ணில்தான் சிங்களர்கள் தஞ்சம் புகுந்தனர் ,இதைச் சிங்களரின் வரலாற்று நூலான மகா வம்சத்தில் காணலாம்.கி.மு.ஐநூரில் விஜயனும் அவனுடைய நண்பர்களுமாக ஏழு பேர் கலிங்க நாட்டிலிருந்து (தற்போதைய ஒரிஸ்ஸா ) இலங்கைக்கு வந்தனர் என்றே சிங்களர் வரலாறு தொடங்குகிறது .
இந்த விஜயனைப் பற்றி ஒரு குறிப்பு :--
இவன் பெற்றோருக்கு அடங்காமல் திரிந்தவன் ,கொடுஞ்செயல் புரிவதற்கும் தயங்காதவன் ,இதனால் மக்களின் வெறுப்புக்கு ஆளானான் ,தந்தையால் அடித்து விரட்டப்பட்ட இவனுக்கு யாரும் ஆதரவு தராததால் நாடோடியாய் அலைந்து திரிந்து காசிக்குப் போய் தங்க வேண்டியதாகி விட்டது . இதன் பின்னர் தான் கடல் வழியாகப் பயணித்து 'தம்பாபணி'(தாமிரபரணி என்பதன் திரிபு) என்கிற தமிழ் ஊரில் கரை ஏறியிருக்கிறான் .இவன் இலங்கை வந்து இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவூட்டும் வகையில் ஸ்ரீலங்கா சிங்கள அரசாங்கம் ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டது .
அந்த அஞ்சல் தலை :-



அதில் விஜயன் ஒரு தோணியில் வந்து இலங்கைக் கரை ஏறி வருவதையும் ,அங்கிருந்த பூர்வீகத் தமிழ்க்குடிப்பெண்ணான குவேனி ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருப்பதையும் சித்தரித்திருந்தனர் .இதன் மூலம் தமிழர்களே பூர்வீகக் குடிமக்கள் ,தோணிகள் ஏறி வந்தவர்கள் சிங்களர்களே என அவர்களே ஒப்புக் கொள்கிற வகையில் இருக்கிறது என்பதால் அஞ்சல் தலையை அவசரம் அவசரமாகச் சிங்கள அரசு திரும்பப் பெற்றுவிட்டது .விஜயன் வந்ததற்குப் பிறகு தமிழர்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுக்கவே கி.மு.நூற்று எழுபதில் சோழ மன்னன் இலங்கை மீது போர் தொடுத்து அவனை அடக்கி வைத்தான் என்கிறது வரலாறு.ஐரோப்பியர் இலங்கைக்கு வரும் வரை தமிழ் மன்னர்களது கட்டுப்பாட்டில் தான் சிங்களர்கள் இருந்தனர்.பின்னர் காலப்போக்கில் ஏற்ப்பட்ட மாறுதலால் தென்னிலங்கையில் சிங்களர்களும் வடகிழக்கு தமிழர் பகுதிகளில் தமிழர்களும் ஆட்சி செய்தனர்.ஆனால் பிரித்தாலும் சூழ்ச்சிக்குப் பெயர் போன ஆங்கிலேயர்கள் ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து மூன்றில் தமிழர் ஆட்சியைக் கலைத்து சிங்களர் கையில் சட்டசபை நிர்வாகத்தை ஒப்படைத்தனர் .இது தான் சிங்கள ஆதிக்கம் காலூன்றுவதற்கு காரணமாக இருந்தது.சிங்கள விஜயன் இலங்கைக்கு வரும் முன்னர் இலங்கை முழுவதும் தமிழர்களே பரவி இருந்தனர் என்பதை நாம் அங்கு பண்டைய காலத்தில் இருந்த பழம் பெரும் சிவன் கோயில்கள் மூலமாக அறியலாம் . கிழக்கில் திருக்கோணேஸ்வரம், மேற்கில் திருக்கேதீஷ்வரம் ,வடக்கில் நகுலேஸ்வரம் ,தெற்கில் முன்னேஷ்வரம் என்கிற சிவ வழிபாட்டுத் தலங்கள் இருந்தன.இன்றைக்கும் இந்தக் கோயில்கள் இலங்கையில் இருக்கின்றன ஆயினும் அதன் பழம் பெருமையினை அடுத்தடுத்த அன்னியப் படை எடுப்புகள் ஒவ்வொன்றிலும் இழந்து விட்டு தற்போது சீரமைக்கப் பட்ட கோயில்களாக அவை காட்சி அளிக்கின்றன .கி.பி ஆயிரத்து அறுநூறு முதல் ஆயிரத்து தொள்ளாயிரம் வரையிலும் தொடர்ந்து இலங்கையின் மீது போர்ச்சுகீசியர்கள் ,டச்சுக்காரர்கள் அதன் பின் ஆங்கிலேயர்கள் அவர்களின் பின் சிங்களர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது ஆதிக்கத்தை அங்கே நிறுவுவதன் பொருட்டு ஈழத்தை துண்டாடினர் .இதனால் சீரழிந்தவையே மேற்கூறிய சிவாலயங்கள் .


திருக்கோணேஸ்வரம் ஆலயம் (இன்று ):-


இது மட்டும் அல்ல கல்கியின் பொன்னியின் செல்வன் பெரும்பாலும் கற்பனை கலந்த நாவல் என்றாலும் அதிலும் பல உண்மைச் சம்பவங்கள் உள்ளன . மஹிந்தன் என்ற சிங்கள மன்னன் தன் தகப்பனைக் கொன்று விட்டு ஆட்சிக்கு வந்த செய்தி வரலாற்று உண்மையே ,அந்த மகிந்தனின் வம்சாவழியினரான இன்றைய மஹிந்த ராஜ பக்க்ஷேக்கள் இனப் படுகொலைகளுக்கு இராணுவம் மூலம் உத்தரவிடுவதில் பெரிய வியப்பு ஒன்றும் இல்லை . வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இலங்கை தமிழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது ,தமிழகமும் இலங்கையும் சேர்ந்திருந்த நிலப் பகுதிக்கு "குமரிக்கண்டம்" என்ற பெயர் வழங்கிற்று ,இந்த நிலப்பகுதியை கடல் கொண்ட பின்னர் இலங்கை தனி தீவாக துண்டிக்கப் பட்டது ,இதை மென்டிஸ் என்கிற இலங்கை வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டுள்ளார் .இந்த குமரிக்கண்டமே "லெமூரியா கண்டம் என்றும் அந்நாளில் அழைக்கப் பட்டுள்ளது .

அதற்கான ஆதார வரை படம் :-








No comments: