Tuesday, October 28, 2008

டெல்லி நண்பனும் அவனது சஸ்பென்ஸ் காதலும் ...(என்ன தான் நடந்திருக்கும்?)




அவனது பெயர் ராகேஷ் மாலிக் ,அவனை முதலும் கடைசியுமாக பல்கலைக்கழக ப்ராஜெக்ட் வகுப்புகளின் போது தான் பார்த்தேன் .அது ஒரு எட்டு நாள் பயிற்ச்சி முகாம் ,முதல் மூன்று தினங்கள் அவனை எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லை . அவன் எனக்குப் பின் வரிசையில் வடநாட்டு மாணவர்களுடன் சேர்ந்து அமர்ந்திருந்தான் , எங்கள் குழுவில் இருந்த சிவா மூலமாக நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது அவன் ...அந்த ராகேஷ் எனக்குஅறிமுகமானான் ,வட இந்திய இலக்கணம் தப்பாமல் கோதுமை நிறத்தில் ககலப்பான நடையில் நிறைய இந்தி கொஞ்சம் ஆங்கிலம் தப்பு தப்பான தமிழில் எங்களுடன் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தான் அன்றைக்கு ,பேச்சு இது தான் என்றில்லாமல் அது பாட்டுக்கு உருண்டு புரண்டு திசை மாறிப் போய்க் கொண்டே இருந்து , கடைசியில் அவனுக்கு தமிழ் பாடம் எடுப்பதில் போய் நின்றது .தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்று அவன் கேட்டான் ...என்னுடன் இருந்தவர்கள் எல்லோரும் இருநூற்று நாற்பத்தி ஆறு என்றார்கள் சிவா அது தவறு மொத்தம் இருநூற்று நாற்பத்தி ஏழு என்றார் ...அவன் ஹிந்தி எழுத்துக்கள் பிறகு ஹிந்தி சினிமா பற்றி ஏதோ சொன்னான் ...பேச்சு இப்படியே நழுவ ,நான் அவன் அணிந்திருந்த கூலிங் க்ளாசைப் பார்த்துக் கொண்டிருந்தேன் .அவன் இரண்டொருமுறை அதைக் கழற்றி நம் ரஜினி மாதிரி செய்து காட்டினான் .இதுவரை அவன் பேசியதிலிருந்து அவனுக்கு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஜினி இட்லி ,சாம்பார்(இது ரஜினியை விடவும் நன்றாகத் தெரியுமாம் )ஜெயலலிதா மட்டுமே தெரியும் என்று புரிந்தது ,ஜெயலலிதாவைக் கூட அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை அப்போது வாஜ்பாயி இந்தியப் பிரதமராயிருந்த காலகட்டம் அன்றைக்கு நம் ஜெயலலிதா மேடம் வாஜ்பாயி கவர்மென்ட்டை கலங்கடித்த பரபர செய்திகள் வராத இந்திய பத்திரிகைகளே இல்லை எனலாம் , இப்படித்தான் அவனுக்கு ஜெயலலிதா பரிச்சயமாம் ,சரி விசயத்திற்கு வருகிறேன் ,நான் பயிற்ச்சி வகுப்புக்கு என் சித்தி வீட்டிலிருந்து போய் வந்து கொண்டிருந்தேன் ,வெறும் எட்டு நாட்களுக்குப் போய் ஹாஸ்டலில் தங்குவானேன் என்று தான் அண்ணாநகர் சித்தி வீட்டிலிருந்து மதுரை காமராஜர் பல்கழைகழகம் வரை பஸ்ஸில் போய் வந்தேன் ,ஐந்தாம் நாள் நான் ஏறி அமர்ந்த பஸ்ஸில் ராகேஷும் இருந்தான் ,உட்கார்ந்த பிறகு தான் பார்த்தேன் ,பஸ்ஸில் நிற்கக் கூட இடமில்லை கச கசவென கூட்டம் நிரம்பி வழிந்தது ,அவன் என்னைப் பார்த்து கை அசைத்து புன்னகைத்தான் ,நான் பதிலுக்கு சின்னதாக சிரித்து விட்டு ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டேன் ,அவ்வளவு கூடத்தில் அவனைப் போல நானும் கையா அசைத்துக் கொண்டிருக்க முடியும் ,மதுரை மக்களைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன? எதற்கு வம்பு என்று தான் ,ஒரு வழியாக ஒரு மணி நேரம் கழித்து பல்கலைக்கழக நிறுத்தம் வரவே நானும் ...எனக்குப் பிறகு அவனுமாக இறங்கினோம் , ஏற்க்கனவே லேட் ...அவனுடன் அப்புறம் பேசிக் கொள்ளலாம் முதலில் அட்டண்டன்சில் கையெழுத்துப் போட வேண்டுமே இல்லா விட்டால் ஆப்சென்ட் ஆகி விடும் என்று நான் வேகமாய் நடந்து கொண்டிருந்தேன் .அவன் ஒன்றும் கேட்காமல் என்னை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான் .ஒரு வழியாக காலை கிளாஸ் முடிந்து உணவு இடைவேளை வந்தது ,சாப்பிடலாம் என்று டிபன் பாக்ஸ் திறந்த போது ராகேஷ் எதிரில் வந்து அமர்ந்தான் ,அப்போது தான் அவன் அவனது கதையை (ஆமாம் கேட்க கதை போல தான் இருந்தது எனக்கு ) என்னிடம் சொல்லத் தொடங்கினான் .அவனைப் பற்றி ...அவனது அம்மா ..அப்பா பற்றி ;அவனது படிப்பைப் பற்றி ...( டெல்லி பல்கலைக்கழகத்தில் எல் .எல்.பி முடித்து விட்டு ப்ராக்டிஸ் செய்து கொண்டே பகுதி நேரமாக எம்.ஏ இதழியல்) அவன் பிறந்த பிவானி பற்றி (இது டெல்லிக்கு அருகில் சண்டி காரில் இருக்கும் ஒரு ஊர் ..இது தான் அவன் பிறந்த ஊராம்) அதே ஊரில் தான் யோகிதாவும் பிறந்தாளாம் ;இருவரும் பி.ஏ ஆங்கில இலக்கியம் சேர்ந்து படித்தார்களாம் அதாவது ஒரே கல்லூரியில் ,எப்படியோ காதல் வந்துவிட்டது (எப்படி வந்தது என்றும் அவன் சொன்னான் அவனது ஆங்கிலம் அப்போது எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை ...)பிறகு இவன் எல்.எல்.பிக்காக டெல்லி வந்ததும் அவள் ஹோம் சயின்ஸ் படிக்கப் போய்விட்டாளாம் ,ஆனாலும் காதல் ஓய்ந்து போகவே இல்லை .அது அது பாட்டுக்கு விடுமுறை நாட்களில் திடமாக வளர்ந்து ...வளர்ந்து இப்போது தெளிவாய் தெரிந்து விட்டதாம் இருவருக்கும் ஒருவர் இன்றி மற்றொருவர் வாழவே முடியாதென்று ,எதற்கு இவன் இதையெல்லாம் நம்மிடம் சொல்கிறான் என்ற பிரமையில் இருந்த நான் ஒன்றும் பேசமால் அவன் சொல்வதை வெறுமே கேட்டவாறு இருந்தேன் இதுவரையிலும் ;அவன் தொடர்ந்து இருவருமே மேஜர் தான் ஆனாலும் எங்களது காதல் திருமணத்தில் கை கூடுமா என்ற கவலையில் இருக்கிறேன் நான் என்றான்,இப்போது தான் லேசாக சுரணை வந்தது போல ;ஏன் ? என்றேன் ,மீதிக் கதையை நான் அடுத்த பதிவில் சொல்கிறேன்

3 comments:

Anonymous said...

hello, pls write the next part

பரணி said...

//hello, pls write the next part//

நன்றி இந்திரஜித்
நாளைக்கே எழுதிடறேன் (படிக்க ஆள் கிடைக்கும்போது எழுதிட வேண்டியது தானே )

Anonymous said...

not yet written:-)