
மழை என்னை நனைத்தது
இல்லை
நான் மழையில் நனைந்தேன் ;
சொட்டுச் சொட்டாய்
பட்டுத் தெறித்தது
எப்போது
வெட்டி முறிக்கும்
விரி மழையானதோ ?
தூறலும் சாரலும்
முற்றி முதிர்ந்திட
காடதிரும் கவின்மழை
குளிரக் குளிர மழை
யாருமில்லா அத்துவான பூமி
தூரத் தெரியா வீடு
கண் மறைத்த
வேகம் கொண்ட மழை
எப்போது வீட்டுக்குப் போவது ?
பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு
இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?
என்னை நான் பழித்திட்டும்
நிற்காத பெருமழை
தரை தெரியாக் கனமழை
எப்போது ஓயுமோ ?
காத்திருக்கிறேன் ...!
மலைகளால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட
மேகத்தின் அடிவாரத்தில்
தட்டாம் பூச்சிகளின்
வட்ட ரீங்காரம் கண்டு
கட்டுப்பாடற்ற சுதந்திரத்தோடு
அவை சுற்றிப் பறக்கும்
மட்டற்ற ஆனந்தம் தொற்றிக்கொண்டு
எல்லாம் மறந்து
நின்று கொண்டிருக்கும் போது தான்
மழை என்னை நனைத்தது
இல்லை
நான் மழையில் நனைந்தேன் ;
சொட்டுச் சொட்டாய்
பட்டுத் தெறித்தது
எப்போது
வெட்டி முறிக்கும்
விரி மழையானதோ ?
தூறலும் சாரலும்
முற்றி முதிர்ந்திட
காடதிரும் கவின்மழை
குளிரக் குளிர மழை
யாருமில்லா அத்துவான பூமி
தூரத் தெரியா வீடு
கண் மறைத்த வேகம் கொண்ட மழை
எப்போது வீட்டுக்குப் போவது ?
பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு
இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?
என்னை நான் பழித்திட்டும்
நிற்காத பெருமழை
தரை தெரியாக் கனமழை
எப்போது ஓயுமோ ?
காத்திருக்கிறேன் ...!
மலைகளால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட
மேகத்தின் அடிவாரத்தில்
தட்டாம் பூச்சிகளின்
வட்ட ரீங்காரம் கண்டு
கட்டுப்பாடற்ற சுதந்திரத்தோடு
அவை சுற்றிப் பறக்கும்
மட்டற்ற ஆனந்தம் தொற்றிக்கொண்டு
எல்லாம் மறந்து
நின்று கொண்டிருக்கும் போது தான்
மழை என்னை நனைத்தது
இல்லை
நான் மழையில் நனைந்தேன் ;
சொட்டுச் சொட்டாய் பட்டுத் தெறித்தது
எந்நேரம் வெட்டி முறிக்கும்
விரி மழையானதோ ?
தூறலும் சாரலும்
முற்றி முதிர்ந்திட
காடதிரும் கவின்மழை
குளிரக் குளிர மழை
யாருமில்லா அத்துவான பூமி
தூரத் தெரியா வீடு
கண் மறைத்த வேகம் கொண்ட மழை
எப்போது வீட்டுக்குப் போவது ?
பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு
இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?
என்னை நான் பழித்திட்டும்
நிற்காத பெருமழை
தரை தெரியாக் கனமழை
எப்போது ஓயுமோ ?
காத்திருக்கிறேன் ...!
----------------------------------------------------------------------(மீண்டும்...மீண்டும்)
பரணி
4 comments:
அட அருமையான கவிதை..
அட அருமையான கவிதை..
மீண்டும் மீண்டும் :)
//அட அருமையான கவிதை..
அட அருமையான கவிதை..
மீண்டும் மீண்டும் :)//
வாங்க சுடர்மணி
நிஜமாவே கவிதையப் பாரட்டறிங்களா இல்ல கிண்டலா சொல்றீங்கலானு தெரியலை எப்படி இருந்தாலும் சரி வருகைக்கு நன்றி
அருமை
வாங்க திகழ்மிளிர்
தங்கள் வருகைக்கு நன்றி
Post a Comment