Friday, November 7, 2008

கதை சொல்லி (இது ஒரு புத்தம் புதிய கதை)



கடல் நடுவே

ஒரு கானகமாம்

கானகத்தில்

ஒரு

நெடுவனமாம்

நெடுவனத்தில்

ஒரு

பெருங்காடாம்

பெருங்காட்டில்

ஒரு

நிழற்படமாம்

நிழற்ப்படத்தில்

ஒரு

மாக்கடலாம்

மாக்கடலாம் அக்கடலில்

என்ன?

இப்போது என்ன என்கிறேன் ?

இதொன்றும் தவறில்லை

இப்படியும் கதை சொல்லலாம்

ராஜ ராணிக்கதைகள்

ஓய்ந்து போய்விட்ட பின்

இப்படித்தான்

கதை சொல்கிறோம் ;

என்ன செய்ய ?

சொன்னதையே

சொல்லிக்

கொண்டு

கேட்டதையே

கேட்டுக் கொண்டு

பார்த்ததையே

பார்த்துக் கொண்டு

சலிக்கும் வரை ;

சலித்த பின்னும் ...

இப்படியும் கதை சொல்லலாம் ?!


2 comments:

முரளிகண்ணன் said...

வித்தியாசமான சிந்தனையாக இருக்கிறது இந்த கதைசொல்லல்

தமிழ் said...

கலக்கல்