
கடல் நடுவே
ஒரு கானகமாம்
கானகத்தில்
ஒரு
நெடுவனமாம்
நெடுவனத்தில்
ஒரு
பெருங்காடாம்
பெருங்காட்டில்
ஒரு
நிழற்படமாம்
நிழற்ப்படத்தில்
ஒரு
மாக்கடலாம்
மாக்கடலாம் அக்கடலில்
என்ன?
இப்போது என்ன என்கிறேன் ?
இதொன்றும் தவறில்லை
இப்படியும் கதை சொல்லலாம்
ராஜ ராணிக்கதைகள்
ஓய்ந்து போய்விட்ட பின்
இப்படித்தான்
கதை சொல்கிறோம் ;
என்ன செய்ய ?
சொன்னதையே
சொல்லிக்
கொண்டு
கேட்டதையே
கேட்டுக் கொண்டு
பார்த்ததையே
பார்த்துக் கொண்டு
சலிக்கும் வரை ;
சலித்த பின்னும் ...
இப்படியும் கதை சொல்லலாம் ?!
2 comments:
வித்தியாசமான சிந்தனையாக இருக்கிறது இந்த கதைசொல்லல்
கலக்கல்
Post a Comment