Sunday, November 23, 2008

நடை பாதைச்சிறுவர்கள்

அந்தியில்
களைந்து
பரவும்
மேகப்பொதிகள்
வைகறையிலும்
யாமத்திலும்
சிதறித் தெறிக்கும்
மழைச் சொட்டுக்கள்
ரசிப்பதற்கு
இருக்கலாம்
இத்தனை ...
புசிப்பதற்கு
என்ன வழி ?
தினம் தினம்
தேடிக்கொண்டே அலைகிறோம்
நடைபாதைச் சிறுவர்கள்
நாங்கள்!!!

No comments: