நீ
நீயாவதும்
நான்
நானாவதும்
இனிவரும்
நாட்களில்
முடிகிற காரியமில்லை !
விடிந்து விட்ட
இரவைச் சொல்லியும்
குற்றமில்லை ;
தொலையப் போகும்
பகலை எண்ணியும்
வெட்கமில்லை ;
கல்யாணமென்றால்
சும்மாவா?
கிட்டிய
உரிமையை
ஒட்டியே
வாழ்ந்து முடிப்போம்
வா...
ஒவ்வொரு நாளுமே...!!!
No comments:
Post a Comment