Sunday, November 23, 2008

கல்யாணமென்றால் சும்மாவா???

நீ

நீயாவதும்

நான்

நானாவதும்

இனிவரும்

நாட்களில்

முடிகிற காரியமில்லை !

விடிந்து விட்ட

இரவைச் சொல்லியும்

குற்றமில்லை ;

தொலையப் போகும்

பகலை எண்ணியும்

வெட்கமில்லை ;

கல்யாணமென்றால்

சும்மாவா?

கிட்டிய

உரிமையை

ஒட்டியே

வாழ்ந்து முடிப்போம்

வா...

ஒவ்வொரு நாளுமே...!!!

No comments: