Monday, November 10, 2008

நிறங்களின் ஊடலையும் மனம் ...!!!



எந்த நிறம்


நல்ல நிறம்?


மௌனத்தின்


சலனத்தோடு


முனை மழுங்கிய


புலன்களின் ஊடே


வழுக்கிக் கொண்டு


சறுக்கும்போது


புள்ளியில்


குவிந்த


பெருவெளிச்சத்தின்மத்தியில்


துழாவித்....துழாவி


ஓய்ந்த பின்


எல்லையற்ற


நீள்வெளியில்


கருப்பு அழைத்தது


தன்னுள் அமிழ ;


வெளுப்பு நழுவியது


ஒட்டாமல் வெட்டிக்கொண்டு


கூம்புகளும் உருளைகளும்


குழம்பித் திகைத்த


ஏதோ ஒரு நொடியில்


குத்தீட்டிகளாய்


பரவிச்சிதறின


பளபளப்பாய்


பல நிறங்கள்


நிறங்களின் ஊடலையும் மனமே ...


எந்த நிறம்


நல்ல நிறம் ?

1 comments:

hai said...

Hi

nalaruku . en valthukal .inum konjam improve pannina nalarukum .